தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம்

தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம் (தே.பெ.தொ.க) இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி சமூகமாக நவம்பர் 1993 யில் நிறுவப்பட்டது. தே.பெ.தொ.க ஒரு நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் இயக்குநர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தே.பெ.தொ.க தொடங்குவதன் முக்கிய நோக்கம், இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) உயிரற்ற மற்றும் வாழும் வளங்களை அறுவடை செய்வதோடு தொடர்புடைய பல்வேறு பொறியியல் சிக்கல்களைத் தீர்க்க நம்பகமான உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதாகும்.

  • கடல் வளங்களின் நிலையான பயன்பாட்டிற்கான உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை உருவாக்குதல்.
  • கடலில் பணிபுரியும் நிறுவனங்களுக்கு போட்டிக்குரிய, மதிப்பு கூட்டப்பட்ட தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்குவது .
  • கடல் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை நிர்வகிப்பதற்காக இந்தியாவில் அறிவுச் சார்ந்த தளத்தையும் மற்றும் நிறுவன திறன்களையும் வளர்ப்பது.

எங்கள் முன்னாள் இயக்குனர்கள் -தே.பெ.தொ.க