கடலோரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்


கடல்சார் (கடலோர மற்றும் சுற்றுச்சூழல்) பகுதிகளில் பயன்பாட்டு சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஆணையுடன் குழு செயல்படுகிறது. உள்கட்டமைப்புத் துறையில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் கண்ணோட்டத்துடன் ஒத்துப்போகும் திட்டங்களை ஊக்குவித்து, அதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பும் வழிமுறைக்கு பங்களிப்பதே குழுவின் குறிக்கோள்களாகும்.

இக்குழுவின் நிபுணத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள சிறப்பு வசதிகள், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் காலக்கெடு முடிவு சார்ந்த ஆராய்ச்சியை வழங்குவதன் மூலம் குறிப்பிட்ட ஆதரிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைத் திட்டங்களுக்குச் சேவை வழங்குகிறது.

கடலோர மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் திட்டம், களக் கண்காணிப்பு, எண்ணியல் மாதிரியாக்கம் மற்றும் பொறியியல் பயன்பாடு மூலம் கடலோர உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடலோரப் பாதுகாப்பு குழுவின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். இக்குழுவினர் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டின் கடலூர் கிராம கடலோரங்களில் மணல் நிரப்பப்பட்ட புவி செயற்கைக் குழாய்களாலான கூறுகளாகப் பிரிவுற்றநீரில் மூழ்கிய அலைதாங்கியை வெற்றிகரமாக நிறுவியுள்ளனர்.

img
தமிழகத்தின் கடலுார் கிராமங்களில் கடற்கரை மறுசீரமைப்பு

img
களத் தரவு சேகரிப்புக்கான கண்காணிப்புக் கோபுரத்தை நிறுவுதல்

img
உயர் அதிர்வெண் வானலையுணரி பயன்படுத்தி மேற்பரப்பு மின்னோட்ட அளவீடுகள்

img
கடலோர கட்டமைப்புகளின் செயல்திறனைக் கணிக்கும் எண்ணியல் மாதிரியாக்க ஆய்வுகள்

img
உள்ளிழுப்பு வடிகால் வடிவமைப்பிற்கான் எண்ணியல் மாதிரியாக்க ஆய்வுகள்